![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-27-Apr-2024-10-47-AM-1777.jpg)
ஈப்போ , ஏப் 27 – Kinta மற்றும் Batang Padang உட்பட 9 வர்த்தக மையங்களில் பேரா குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 38 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். 1963ஆம் ஆண்டின் குடிநுழைவு சட்டத்தின் விதிமுறையை மீறியுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் 20 முதல் 55 வயதுடைய அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக பேரா குடிநுழைவுத்துறையின் இயக்குநர் Meor Hasbullah Meor Abdul Malik தெரிவித்தார். காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனை நடவடிக்கை அதிகாலை 2 மணிவரை நடைபெற்றதாகவும் உணவகங்கள், மலிவு விலை தங்கும் விடுதி, பலபொருட்களை விற்கும் இரண்டு கடைகள் மற்றும் ஒரு தொழிற்சாலையிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
பேரா குடிநுழைவுத்துறையின் அமலாக்க பிரிவுக்கு கிடைத்த உளவுத் தகவல் மற்றும் கண்காணிப்பை தொடர்ந்து அந்த இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வங்காளதேசத்தை சேர்ந்த ஆறு ஆடவர்கள், 4 இந்தோனேசிய பெண்கள், மியன்மாரைச் சேர்ந்த 10 ஆண்கள், இரண்டு பெண்கள் , ஐந்து சீன பிரஜைகள் மற்றும் மூன்று இந்தியப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என Meor Hasbullah வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.