Latestமலேசியா

போலி ஆவணங்கள் மூலம் RM300,000 மோசடி; முன்னாள் அரசு ஊழியர் கைது

கோலாலம்பூர், ஜூலை-15-போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, சுமார் 300,000 ரிங்கிட் அரசு நிதியுதவியைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

​30 வயது மதிக்கத்தக்க அந்நபர், 2020 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், தான் பணியில் இருந்தபோது இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

​விசாரணையில், அந்த நபர் 11 பேரின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தி, அரசு நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் மாதந்தோறும் 500 முதல் 1,000 ரிங்கிட் வரை அந்த நபரின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

​இது குறித்துப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் கோலாலம்பூர் MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த அவ்வாடவரை அந்த ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைதுச் செய்தனர்.

ஜூலை 17-ஆம் தேதி வரை அவரை 4 நாட்கள் தடுத்து வைக்க கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!