புத்ரா ஜெயா, ஏப்ரல்-15, வெப்ப அலை உபாதைகள் தொடர்பில் இவ்வாண்டு இதுவரை 45 சம்பவங்களை சுகாதார அமைச்சு பதிவுச் செய்திருக்கிறது.
அவற்றில் 11 சம்பவங்கள் வெப்பப் பக்கவாதம் தொடர்பானவை.
33 சம்பவங்கள் வெப்ப சோர்வு என்றும் ஏனைய ஒன்று வெப்ப வலிப்பு என்றும் KKM தெரிவித்துள்ளது.
அக்காலக்கட்டத்தில் வெப்பப் பக்கவாதத்தால் இருவர் மரணமடைந்திருப்பதாகவும் சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr Muhammad Radzi Abu Hassan தெரிவித்தார்.
அவ்விருவரும் முறையே 22 வயது இளைஞர், 3 வயது ஆண் குழந்தை என்றார் அவர்.
அந்த 45 சம்பவங்களில் ஆக அதிகமாக பேராக்கிலும் கெடாவிலும் தலா 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூரில் ஆறும், ஜொகூர், பஹாங், நெகிரி செம்பிலானில் தலா ஐந்துமாக பதிவாகியுள்ளன.
மற்றவை சபா, பினாங்கு, பெர்லிஸ் மற்றும் கிளந்தானில் பதிவானவை.
வெப்பநிலை இன்னும் முழுமையாகத் தணியாத காரணத்தால் பொது மக்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
அவசியமின்றி வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்வதோடு போதுமான அளவு தண்ணீரைக் குடித்து வருமாறும் Datuk Dr Radzi கேட்டுக் கொண்டார்.