![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-17-May-2024-08-38-AM-4163.jpg)
அலோர் ஸ்டார், மே-17, கெடா, அலோர் ஸ்டாரில் பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து 2 கார்களின் மேலே விழுந்ததில், இரு ஆடவர்கள் அவற்றுள் சிக்கிக் கொண்டனர்.
நேற்று பிற்பகல் 3.30 மணி வாக்கில் Jalan Datuk Kumbar-ரில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து 12 பேர் கொண்ட தீயணைப்பு மீட்புத் துறையினரும் உடனடியாக அங்கு விரைந்தனர்.
எனினும் அவர்கள் வந்துச் சேருவதற்குள், அங்கிருந்த பொதுமக்கள் அவ்விருவரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் முறையே 61 வயது இஸ்மாயில் யாக்கோப், 38 வயது மிஸ்வான் ஷா டாஸ்னிர் என அடையாளம் கூறப்பட்டது.