Latestமலேசியா

ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து காணாமல்போன 3 பதின்ம வயது பெண்கள் மலாக்காவில் கண்டுபிடிப்பு

சிரம்பான், ஜூலை 3 – நெகிரி செம்பிலான் கோலாப்பிலாவிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து காணாமல் போன பதின்ம வயதுடைய மூன்று இளம் பெண்கள் நேற்றிரவு மலாக்காவில் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து 11 மற்றும் 14 வயதுடைய அந்த மூவரும் ஜாசின் , சிம்பாங் பெக்கோவிலுள்ள (Simpang Bekok) ஒரு வீட்டில் 35 மற்றும் 67 வயதுடைய இரு பெண்களுடன் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கோலா பிலா போலீஸ் தலைவர் அம்ரான் கனி (Amran Ghani ) தெரிவித்தார்.

காணாமல்போனதாக கூறப்பட்ட அம்மூவரும் தங்களது பாட்டி மற்றும் அத்தையின் கண்காணிப்பில் பாதுகாப்புடன் இருந்தனர். அந்த மூவரும் காணாமல்போனதாக ஜூன் 28 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் போலீஸ் புகார் பெற்றிருந்ததாக அம்ரான் கனி கூறினார். அரசு சார்பற்ற இயக்கத்தினால் நடத்தப்பட்டுவரும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அந்த மூவரும் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!