கோலாலம்பூர், ஏப் 1 – நாட்டின் முதல் எதிரியாக இருக்கும் லஞ்சத்தை துடைத்தொழிப்பதற்கான தமது பேராட்டத்தில் இனி தீவிர கவனம் செலுத்தப்போவதாக பேரரசர் Sultan Ibrahim தெரிவித்திருக்கிறார். தமது பதவிக் காலத்தில் லஞ்சத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு நேரம் வந்துவிட்டதாக அவர் கூறினார். இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ Azam Baki க்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார். அந்த அமலாக்க நிறுவனத்தின் ஆகக்கடைசி மேம்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையில் அவரது அந்த பேட்டி அமைந்தது.
நான் இதற்கு முன் வலியுறுத்தியதுபோல , எனது தேனிலவு முடிந்துவிட்டது. இப்போது தேனீக்களை பிடிக்கச் செல்லுங்கள் என்று கூறியதோடு தேனிலவு காலம் முடிந்ததற்கு அடையாளமாக Azam Baki யிடம் தேனீக்களையும் Sultan Ibrahim ஒப்படைத்தார். இன்று இஸ்தானா நெகாராவில் Azam Baki க்கு அவர் 30 நிமிடம் பேட்டி வழங்கினார்.