காஜாங், மார்ச் 4 – சிலாங்கூர், காஜாங்கில், கொமியூட்டர் இரயிலில் அடிபட்டு மூவர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு மணி 10.53 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
காஜாங், ஜேட் ஹில், தாமான் புஞ்சாக் உத்தாமாவிலுள்ள, KTM தண்டவாளத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததை, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், அச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.
மேல் விசாரணைக்காக சடலங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.