![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-04-Jun-2024-07-44-PM-288.jpg)
காப்பார், ஜூன்-4 சிலாங்கூர், காப்பாரில் இன்று பெய்த கனமழையின் போது மரமொன்று வேரோடு சாய்ந்து 2 கார்களின் மீது விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐந்து பேர் உயிர் தப்பினர்.
Jalan Kapar Batu 6-மில் பிற்பகல் 3 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
உயிர் தப்பியவர்கள், Perodua Bezza காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் Toyota Altis காரோட்டியும் ஆவர்.
அவர்களில் இருவர் சிறார்கள் என சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.
மரம் விழுந்ததும், தீயணைப்பு வண்டி வருவதற்குள், காரில் இருந்த ஐவரும் சொந்தமாக வெளியே வந்து விட்டனர்.
இந்நிலையில், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.