Latestமலேசியா

குவாலா பெராங்கில் மாணவர் தங்கும் விடுதியில் தீ; 10 மாணவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

குவாலா பெராங், மே-13, திரங்கானு, குவாலா பெராங்கில் உள்ள உலு திரங்கானு அறிவியல் இடைநிலைப் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதி அறை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீப்பற்றிப் கொண்டதில், 10 மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகவும் பதட்டம் நிறைந்த நிமிடங்களை எதிர்கொண்டனர்.

அதிகாலை 3.30 மணிக்கு தீ பரவியதில் ஆண் மாணவர்கள் தங்கியிருந்த அறை 70 விழுக்காடு சேதமடைந்தது.

எனினும் அந்த அறையில் இருந்த அனைத்து மாணவர்களும் தீ முழுவதுமாக பரவுவதற்குள் அங்கிருந்து வெளியேறி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை காலை 6 மணிக்குள்ளாக தீயை முழுவதுமாக அணைத்தது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வரும் வேளை, சேத விவரங்களும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!