கோத்தா கினபாலு, மார்ச் 28 – சபாவின் கிழக்கு கரையின் கலாபகன் மாவட்டத்தில் முதலை தாக்கிதைத் தொடர்ந்து ஆடவர் ஒருவர் காணவில்லை. அஸ்மாதி ஹாருன் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த ஆடவர் கம்போங் மங்காவுக்கு அருகேயுள்ள ஆற்றில் கிளிஞ்சல்களை பிடித்துக்கொண்டிருந்தபோது முதலை தாக்கியதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாலை மணி 4.35அளவில் அந்த சம்பவம் நிகழ்ந்தபோது தமது குடும்பத்தை சேர்ந்த இதர இரண்டு உறுப்பினர்களுடன் அஸ்மாதி ஹாருனை முதலை தாக்கியதாக கூறப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் ‘Tawau’விலிருந்து 89 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தேடும் பணி இன்று காலையில் மீண்டும் தொடங்கியதாக தீயணைப்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.