Latestமலேசியா

சபா கினபாத்தாங்கானில் பள்ளிக் கட்டிடம் தீக்கிரையானது

கோத்தா கினபாலு, மார்ச் 5 – சபாவில் கினபாத்தாங்கானில் பள்ளிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் அந்த கட்டிடத்தின் ஆறு அறைகள் முழுமையாக எரிந்து சாம்பலானது . எனினும் அந்த சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லையென தீயணைப்பு மீட்புத்துறை தெரிவித்தது. Sekolah Kebangsaan Suan Lamba பள்ளியின் கைவிடப்பட்ட கட்டிடத்தில் தீப்பிடித்தாக நேற்று மாலை மணி 5.10 அளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கினபாதங்கன் தீயணைப்பு நிலையத்திலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு அனுப்பிவைக்கப்பட்டது. தீயினால் அந்த கட்டிடம் முழுமையாக அழிந்தது. மாலை மணி 6.10 அளவில் தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!