
கோலாலம்பூர், ஜூன் 4 – சபா மற்றும் சரவாக்கில் செவ்வாய்க்கிழமை 2.9 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
முதல் நிலநடுக்கம் காலை 10.36 மணிக்கு ரானாவ் (Ranau) சபாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதன் அதிர்வு குண்டாசாங் (Kundasang), ரானாவ் Ranau மற்றும் கோத்தா பெலூட் (Kota Belud) பகுதிகளில் உணரப்பட்டது.
அதே நாளில் இரவு 10.33 மணிக்கு மம்போங் (Mambong), சரவாக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மற்றொரு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வு சமரஹான் (Samarahan) மற்றும் செரியான் (Serian) பகுதிகளில் உணரப்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



