சபா, ஜன 14 – சாலையில் உள்ள குழிகளைத் தவிர்க்க முயன்ற குப்பை லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் ஓட்டுனர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று சபாவின் கினாபடாங்கன் கம்போங் செந்தோசா ஜெயாவில் நடந்துள்ளது.
கினாபாத்தாங்கான் மாவட்ட மன்றத்திற்குச் சொந்தமான அந்த குப்பை லோரிய லஹாட் டத்துவிலிருந்து சண்டாகானுக்கு சென்றுக் கொண்டிருந்தது என கினாபாத்தாங்கான் போலிஸ் தலைவர் துல்பஹாரின் இஸ்மாயில் கூறியுள்ளார்.
இவ்விபத்தில் லோரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக துல்பஹாரின் தெரிவித்தார்.