![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-02-Jul-2024-07-33-PM-9752.jpg)
ஷா ஆலாம், ஜூலை 2 – சிலாங்கூர் எப்சி அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் அஹ்மாட் குஜைமி பையின் வீட்டில், கடந்த மே மாதம் கொள்ளையிட்ட கும்பலின் அடையாளம் அம்பலமாகியுள்ளது.
மாராங்கில், ஜூன் 26-ஆம் தேதி, இரு சந்தேக நபர்கள் கைதானதை தொடர்ந்து, அந்த கொள்ளை சம்பவத்தை சூழ்ந்திருந்த மர்ம முடிச்சி அவிழ்ந்தது.
எனினும், கைதான 28 மற்றும் 33 வயது ஆடவர்களுக்கும், இதர காற்பந்து வீரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்பதை, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
சாலை விபத்து ஒன்றில் சிக்கிய அவ்விருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், ஒன்பது வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களிலும், வாகன திருட்டு சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
போதைப் பொருள் உட்கொண்டிருந்த அவர்களிடமிருந்து, ஹோண்டா சிட்டி கார் ஒன்று, யமஹா மோட்டார் சைக்கிள் ஒன்று, கைபைகள், கைப்பேசிகள், மடிக் கணினி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, கடந்த மே 23-ஆம் தேதி, சிலாங்கூர் எப்சி அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் அஹ்மட் குஜைமி பையின் வீட்டில் கொள்ளையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.