ஜொகூர் பாரு, ஏப்ரல்-3, ஜொகூர் பாருவில் தனியே சுற்றித் திரிந்த போது கண்டுபிடிக்கப்பட்ட 11 வயது சிறுவன் சித்ரவதைக்கு ஆளானவன் அல்ல என்பதை போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது.
அவனது உடலில் காயங்களோ அல்லது துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்களோ இல்லை என தென் ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் கூறினார்.
மூன்றாவது குழந்தையைப் பிரசவித்தப் பிறகு வீட்டில் பத்தியத்தில் இருக்கும் தனது தாயிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல், வெளியில் சுற்றுவதற்காக அவன் வீட்டை விட்டு கிளம்பியது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்ததும் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அச்சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட உதவியப் பொதுமக்களுக்கும் ரவூப் நன்றித் தெரிவித்தார்.
அச்சிறுவன் Larkin-னில் தனியே சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த காணொலி ஒன்று முன்னதாக WhatsApp-பில் வைரலானது.
அதில் அவன் கிழிந்த சட்டையுடன் இருந்த வேளை, அவனது உடலில் காயத் தளும்புகள் இருந்ததாக காணொலியை எடுத்தவர் கூறிக் கொண்டிருந்தார்.