Latestமலேசியா

திரங்கானு, சுக்காயில் வனத்துறையின் பொறியில் சிக்கிய சூரியக் கரடி; மக்கள் நிம்மதிப் பெருமூச்சு

சுக்காய், ஏப்ரல்-29, திரங்கானு கெர்த்தேவில் உள்ள பெங்காலான் ரங்கோன் பகுதி வாழ் மக்களை அச்சுறுத்தி வந்த சூரியக் கரடி, ஒருவழியாக வனத்துறையிடம் பிடிபட்டுள்ளது.

வனத்துறை வைத்தப் பொறியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் 80 கிலோ எடையிலான அக்கரடி சிக்கிக் கொண்டது.

அந்த ஆண் கரடி, காட்டில் இருந்து வெளியேறிக் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்துப் போவதுமாக இருந்ததால், சுற்றுப்புற மக்கள் எந்நேரமும் அச்சத்திலேயே வாழ்ந்து வந்தனர்.

இதையடுத்து ஏப்ரல் 22-ஆம் தேதி Perhilitan வனத்துறை கரடியைப் பிடிக்க பொறியைய் பொருத்தியதாகத் தெரிகிறது.

ஒருவழியாக சிக்கியக் கரடி, அதற்குத் தோதுவான இயற்கை வாழ்விடத்திலேயே விடப்படும் என வனத்துறையினர் கூறினர்.

கரடி பிடிப்பட்டிருப்பதால் பெரும் நிம்மதி அடைந்துள்ள மக்கள், இனி கவலையில்லாமல் நடமாடலாம் என்றனர்.

அக்கரடி விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி பெரும் நட்டத்தை ஏற்படுத்தியத் தகவலையும் கிராம மக்கள் பகிர்ந்துக் கொண்டனர்.

இனி வீட்டுக்குள்ளேயே அடைந்துக் கிடக்காமல் பிள்ளைகள் தைரியமாக வெளியில் சென்று விளையாடலாம் என்றும் பெற்றோர்கள் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!