Latestமலேசியா

திரெங்கானு நீர்வீழ்ச்சியில் தோழியைக் காப்பாற்ற முயன்ற UMT பல்கலைக்கழக மாணவி நீரில் மூழ்கி பலி

செத்தியூ, ஏப்ரல்-20-திங்கானு, செத்தியூவில் உள்ள Lata Ulu Kasar நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிய தனது தோழியைக் காப்பாற்ற முயன்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

UMT எனப்படும் ​மலேசியத் திரங்கானு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயது Suraya Hassan என்பவரே இந்தத் துயரச் சம்பவத்தில் பலியானார்.

ஜோகூர், பத்து பஹாட்டைச் சேர்ந்த இவர், தனது நண்பர்கள் ஏழு பேருடன் அங்கு கேளிக்கை சுற்றுலா சென்றிருந்தார்.

​நேற்று மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது, Adilah என்ற மாணவி நீரில் தத்தளிப்பதைக் கண்ட Suraya, Nur Najwa Farina ஆகிய இருவரும் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

​இருப்பினும், எதிர்பாராத விதமாக Suraya பலத்த நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கினார்.

அவருடன் சென்ற Nur Najwa மயிரிழையில் உயிர் தப்பினார்.

​தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் Suraya-வின் உடலை மீட்டனர்.

Nur Najwa தற்போது செத்தியூ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!