புத்ரா ஜெயா, மார்ச் 24 – தென் தாய்லாந்தில் Pattani , Yala மற்றும் Narawthiwat ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் தீவைக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து மலேசிய தூதரக அலுவலகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சு நிலைமையை அணுக்கமான கண்காணித்து வருகிறது. அந்த சம்பவங்களில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தகவல்களை பெறுவதற்காக SongKhla விலுள்ள ஊராட்சி துறைகளுடன் மலேசிய தூதரக அலுவலகம் அணுக்கமான ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும் சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள மலேசியர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதோடு உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டி மற்றும் ஆகக் கடைசி நிலவரங்களை அறிந்துகொண்டு செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.