Latestமலேசியா

நீலாயில், பெண் மற்றும் இரு பிள்ளைகளின் சடலம் கண்டெடுப்பு ; கணவன் கைது

நீலாய், பிப்ரவரி 20 – நெகிரி செம்பிலான், லெங்கெங்கிலுள்ள, வீடொன்றில் மனைவி மற்றும் இரு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

அச்சம்பவம் தொடர்பில், நேற்றிரவு மணி 9.25 வாக்கில் போலீசாருக்கு அவசர அழைப்பு கிடைத்ததை, நீலாய் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹசிம் உறுதிப்படுத்தினார்.

உயிரிழந்தது 34 வயது பெண்ணும், அவரது மூன்று மற்றும் ஆறு வயதான இரு பெண் பிள்ளைகள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து, பின்னிரவு மணி ஒன்று வாக்கில், சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டான்.

அவ்வாடவன் இன்று தொடங்கி இம்மாதம் 23-ஆம் தேதி வரையில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!