![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-30-Jun-2024-01-14-PM-9729.jpg)
மணிலா, ஜூன் 30 – தென் பிலிப்பைன்ஸில் ஷம்போங்கா ( Zamboanga ) நகரில் பட்டாசு தொழிற்சாலை கிடங்கில் வலுவான வெடிப்பு ஏற்பட்டதில் ஐவர் மரணம் அடைந்ததோடு குறைந்தது 20 பேர் காயம் அடைந்தனர். உள்ளூர் நேரப்படி மாலை மணி 4 அளவில் ஏற்பட்ட அந்த வெடிவிபத்து 1.14 கிலோமீட்டர் தொலைவில் அந்த கிடங்கிற்கு அருகேயுள்ள குடியிருப்பு மற்றும் வர்தக இடங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. காயம் அடைந்தவர்களில் எண்மர் கவலைக்கிடமாக இருப்பதாக நகர இயற்ககை பேரிடர் நிர்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.