கோலாலம்பூர், பிப் 14 – 2016 ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு பரிசோதித்த தேன் தயாரிப்புகளில் 6 விழுக்காட்டிற்கும் குறைவானவை அமைச்சின் தரத்தை நிறைவு செய்வதாக இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் உள்நாட்டு தரத்தையும் அவை நிறைவு செய்யவில்லை. மலேசிய சந்தையில் பொதுமக்களிடம் விற்கப்படும் 90 விழுக்காடு தேன் போலியானது என் வெளியான தகவலைத் தொடர்ந்து தேன் தயாரிப்புகளை அமைச்சு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
2016ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை திரட்டப்பட்ட பல்வேறு பிராண்டுகளைக் கொண்ட 769 தேன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 45 மாதிரிகள் அல்லது 5.85 விழுக்காடு 1985ஆம் ஆண்டின் உணவு கட்டுப்பாடு விதிகளை நிறைவு செய்யவில்லை. சம்பந்தப்பட்ட தேன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.