Latestமலேசியா

50,000 ரிங்கிட் லஞ்சப் புகார்; வங்கி முன்னாள் நிர்வாகிக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்

கோத்தா பாரு, ஜூன்-10, வாடிக்கையாளரிடம் இருந்து 50,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தைக் கேட்டுப் பெற்றதன் தொடர்பில் கிளந்தானில் கைதான வங்கி முன்னாள் நிர்வாகி ஒருவர், விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை வரையிலான அத்தடுப்புக் காவல் ஆணையை, கோத்தா பாரு மேஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று வெளியிட்டது.

2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, அவருக்கு அந்த 5 நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட வங்கியின் திட்டமொன்றை மேற்கொள்வதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக 50 வயது மதிக்கத்தக்க அந்நபர் புகாரை எதிர்நோக்கியுள்ளார்.

நேற்று கோத்தா பாரு MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது அவர் கைதானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!