Latestஇந்தியா

62 வயது ஆடவரை புலி அடித்துக் கொன்று தின்றது

போபால், மே 18 – இந்தியாவில் போபாலில் 62 வயது ஆடவர் ஒருவரை புலி அடித்து கொன்று அவரது உடலின் பாதியை தின்றுள்ள சம்பவம் கிராமவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த துயரச் சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள நரெய்சன் மாவட்டத்திலுள்ள obdullahganj வட்டாரத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அடத்தியான காட்டுப்பகுதியிலிருந்து அந்த புலி வந்திருக்கக்கூடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த புலியை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் பொறி வைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். பீடி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை இலையை பறிப்பதற்காக Maniram Jatav என்ற நபர் அருகேயுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் புகார் செய்ததை தொடர்ந்து அவரை தேடும் நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டது. ஒரு புதரின் அருகில் புலியினால் கடித்து குதறப்பட்ட அவரது உடலை வனத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!