
லங்காவி, ஜூன்-19-2019-ஆம் ஆண்டு ஜோகூர் பாருவில் உள்ள தனது குடும்ப வீட்டை விட்டு வெளியேறி, காணாமல் போனதாகப் பதிவுச் செய்யப்பட்ட 21 வயது இளம் பெண், லங்காவியில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் குவாவில் உள்ள Taman Helang Perdana வீடமைப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அந்தப் பெண் ஒரு குழந்தையுடன் அங்கு வசித்து வந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூர், Majidee போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் இன்னும் காணாமல் போனவர்கள் பட்டியலிலேயே இருப்பது தெரியவந்தது.
தான் ஜோகூர் பாரு வீட்டை விட்டு வெளியேறி லங்காவியில் குடியேறியதாகவும், ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
சோதனையின் போது அவரது கணவர் வீட்டில் இல்லை.
அப்பெண் பாதுகாப்பாக இருக்கும் தகவல் ஜோகூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லங்காவி போலீஸ் கூறியது.



