கோலாலம்பூர், ஜன 16 – முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஜைனுடின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரிடம் விசாரணை செய்யும் முடிவை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி (MACC) ஒத்தி வைத்துள்ளது. 85 வயதுடைய டைய்மிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எம்.ஏ.சி.சி நேற்று திட்டமிட்டிருந்தது. அவரது சொத்து மற்றும் பணம் வளம் குறித்து எம்.ஏ.சி.சி தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் எங்களிடம் கூறப்பட்டது.
எனவே டைய்மிடம் விசாரணை நடத்துவதற்கு புதிய தேதியை எம்.ஏ.சி.சி நிர்ணயிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லையென உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. வெற்றிகரமான வர்த்தகருமான டைய்ம் 1984ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டு வரை நிதியமைச்சராக இருந்து வந்தார்.