திருப்பதி, பிப் 16 – திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க முயன்ற ஆடவர் ஒருவரை சிங்கம் கொடூரமாக கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது போதையில் இருந்ததாக நம்பப்படும் ராஜஸ்தானைச் சேர்ந்த 38 வயதான அவ்வாடவன் 4 மீட்டர் உயரம் உள்ள பாதுகாப்பு சுவரை ஏறி சிங்கம் இருந்த கூண்டிற்குள் குதித்துள்ளான்.
பாதுகாவலர் எவ்வளவோ தடுத்தும், சற்றுக் பொருட்படுத்தாது கூண்டிற்குள் குதித்த அவ்வாடவனை நீர் தொட்டி மேலே இருந்த சிங்கம் கண் இமைக்கும் நேரத்திற்குள் கீழே இழுத்து தாக்கியது.
நேற்று பிற்பகல் மணி 2.30 அளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில், இந்த சம்பவத்திற்குப் பின் உயிரியல் பூங்கா அதிகாரிகள் அந்த சிங்கத்தை பார்வையாளர் பகுதியிலிருந்து வெளியேற்றி வேறு இடத்திலுள்ள கூண்டில் அடைத்துள்ளனர்.