
மெமிங்கன் (ஜெர்மனி), ஜூன்-5 – இத்தாலியின் மிலான் நகரை நோக்கிச் சென்ற Ryanair விமானம் தெற்கு ஜெர்மனியில் இடி மின்னலின் போது காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதில், 9 பயணிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து மூனிக் நகருக்கு 70 மைல் தூரத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தலையில் காயம் அடைந்த ஒரு பெண், அவரது இரண்டு வயது குழந்தை மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட 59 வயது பெண்ணும் அதில் அடங்குவர்.
மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; மற்றவர்களின் காயங்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
விமானத்தின் கேப்டன் தரையிறங்குவதற்கு முன்பே மருத்துவ உதவியை கோரியதாக Ryanair விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்தது.
மிலானுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் விமான நிறுவனம் கூறியது.