Latestமலேசியா

காஜாங்கில் 15-ஆவது மாடியிலிருந்து விழுந்து 22 வயது மனநோயாளி மரணம்

காஜாங், ஏப்ரல்-30, சிலாங்கூர் காஜாங்கில் மனநோயாளி என நம்பப்படும் 22 வயது இளைஞன், அடுக்குமாடி குடியிருப்பின் 15-ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தான்.

நேற்று காலை 8.30 மணிக்கு மேல் அது குறித்து பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக, காஜாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.

சம்பவ இடத்தில் பரிசோதனை நடத்தியதில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

அவ்விளைஞனின் சடலம் சவப்பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

உயரிய இடத்திலிருந்து விழுந்ததே மரணத்திற்குக் காரணம் என அதில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து திடீர் மரணமாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டதாக நாஸ்ரோன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!