Latestமலேசியா

ஆசியான் உச்ச நிலைக் கூட்டம் கோலாலம்பூரில் போக்குவரத்து சீராக இருந்தது

கோலாலம்பூர் – மே 26 – KLCC மாநாட்டு மையத்தில் 46 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு சில சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதை மாற்றம் செய்யப்பட்ட போதிலும் , தலைநகரைச் சுற்றி இன்று போக்குவரத்து சீராக இருந்தது. காலை 7 மணிக்கு பல முக்கிய வழித்தடங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி தலைநகரில் பரபரப்பான நேரத்தில் போக்குவரத்து சாதாரண நாளைப் போலவே மெதுவாக நகர்வதைக் காணமுடிந்தது.

காலை 8 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் சாலை மூடல் மற்றும் மாற்றுப்பாதைகள் சீரான போக்குவரத்திற்காக வாகனங்களுக்காக பாதை மாற்றப்படும் என புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணைத்துறையின் இயக்குநர் டத்தோ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார். தலைநகரிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பேராளர்கள் KLCC யிலுள்ள மாநாட்டு மையத்திற்கு செல்வதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!