Latestஉலகம்

நேப்பாள் நில நடுக்கத்தில் மரண எண்ணிக்கை 157 ஆக உயர்வு

காட்மண்டு , நவ 5 – நேப்பாளத்தின் தென்மேற்கு வட்டாரமாக JajarKot மாவட்டத்தில் ரெக்டர் கருவியில் 5.4 அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பேரிடரில் பல வீடுகள் இடிந்ததால் பலர் தங்களது குடும்பத்தோடு புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மலைப்பகுதியான இடங்களுக்கு மீட்பு குழுவினர் உடனயாக செல்வதற்கான பாதைகள் இல்லாத காரணத்தினால் மீட்புக் குழுவினர் உடனடியாக சென்றடைய முடியவில்லை. சில இடங்களில் நிலச்சரிவினால் மண் சரிவு காரணமாக சாலைகளும் மூடிக்கிடப்பதால் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நடந்தே செல்லவேண்டிய சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் கிடைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நேப்பாள துணைப்பிரதமர் நாராயண் கஜி ஷ்ரேஸ்தா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பலர் தங்குவதற்கு வீடுகள் இன்றி இருப்பதால் கூடாரங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!