Latestமலேசியா

U-turn போட்ட லாரியை கார் மோதியதில் 2 மாதக் குழந்தை பரிதாப மரணம்

ஜாசின், ஏப்ரல்-30, மலாக்கா, ஜாசினில் U-turn போட்ட லாரியை கார் மோதியதில், அதிலிருந்த 2 மாதக் கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

நேற்று மதியம் (AMJ ) எனப்படும் அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் நெடுஞ்சாலையில் அவ்விபத்து நிகழ்ந்தது.

ஆபத்தான நிலையில் மூவார் சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

இறப்பதற்கு முன் அவசர சிகிச்சைப் பிரிவில் Nur Hafirzah Qintina Shahrul Asraf Naim சுமார் 2 மணி நேரங்களாக உயிருக்குப் போராடியது வேதனையாகும்.

அவ்விபத்தில், குழந்தையின் 35 வயது தந்தையும் 22 வயது தாயும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

லாரி டிரைவருக்குக் காயமேதும் ஏற்படவில்லை.

கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி வந்த பாதையில் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, ஜாசின் போலீஸ் கூறியது.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணைத் தொடருகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!