கோலாலம்பூர், மார்ச் 15 – அண்மையில் தமிழ் மற்றும் சீன பள்ளிகள் குறித்து கருத்துரைத்த பேராசிரியர்கள் தேசிய மன்றத்தைச் சேர்ந்த மூத்த கல்வியாளர் தியோ கோக் சியோங்கிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
குற்றவியல் சட்டத்தின் 505 உட்பிரிவு (C ) மற்றும் தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்தியதாக தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233ஆவது விதியின் கீழ் அவர் மீது விசாரணை நடத்தப்படுவதாக பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.
தியோ கோக்விடம் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமான எந்தவொரு பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லையென கூறப்பட்டது.
தாய்மொழிப் பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருப்பதாக தியோ கோக் கூறியிருந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக போலீசார் விசாரணையை தொடங்கியிருப்பதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.