Latestமலேசியா

ஜோகூரில், காதலியின் மகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவன் கைது

மூவார், ஜனவரி 11 – ஜோகூர், மூவாரில், வெகு நாட்களாக தனது  காதலியின் மகளிடம், ஆபாச சேட்டை புரிந்து வந்த, 53 வயது காமுகன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டான்.

நேற்று காலை மணி எட்டு வாக்கில், மின்னியல் தொழிலாளராக பணிப்புரியும், அவ்வாடவனுடன் அந்த 17 வயது பெண், வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டின் கதவை சாத்துமாறு கூறிவிட்டு அவன் கை வரிசையை காட்டியுள்ளார். 

எனினும், அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் செய்த போலீஸ் புகாரை தொடர்ந்து, நேற்றிரவு மணி எட்டு வாக்கில் அவன் கைதுச் செய்யப்பட்டதை, மூவார் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ராயிஸ் முக்லீஸ் அஜ்மான் அஜிஸ் தெரிவித்தார்.

ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தந்தையான அவ்வாடவன், பாதிக்கப்பட்ட பெண்ணின், 40 வயது தாயாருக்கு வெகு காலமாகவே பழக்கமானவன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தின் போது, அப்பெண்ணின் தாயார் வீட்டில் இல்லாத போது, அவன் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

விசாரணைக்காக, இன்று தொடங்கி அடுத்த செவ்வாய்கிழமை வரையில் அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!