Latestமலேசியா

காரிலிருந்து பேக் திருடு; புகார் செய்யுமாறு பாதிக்கப்பட்டவருக்கு போலீஸ் அறிவுரை

காஜாங், மே-23 – சிலாங்கூர், பாங்கியில் பூட்டப்படாத காரிலிருந்து பேக் திருடுபோன சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்டவர் புகாரளிக்க வேண்டுமென போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

டிக் டோக்கில் வைரலாகியுள்ள அச்சம்பவ வீடியோவை தாங்களும் பார்த்ததாக, காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.

கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த ஓர் ஆடவன், பூட்டப்படாத காரிலிருந்து அந்த பேக்கைத் திருடுவது அதில் தெரிகிறது.

அதற்கு முன்பாக, அக்காரோட்டியான பெண், காரை பூட்டாமல் வெளியே போனதும் தெரிந்தது.

சம்பவம் பாங்கியில் நடந்ததாகக் கூறப்பட்டாலும், பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் வரவில்லை; ஏற்பட்ட இழப்பு குறித்த தகவலும் இல்லை.

எனவே சம்பந்தப்பட்டவர் புகாரளித்தால் விசாரணையை மேற்கொள்ள இலகுவாக இருக்குமென அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!