Latestமலேசியா

20 லட்சம் ரிங்கிட் செலவில் தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளி இணைக்கட்டிட கட்டுமான பணி ஜனவரில் தொடங்கும்

கோலாலம்பூர், டிச 9 – இருபது லட்சம் ரிங்கிட் செலவில் கோலாலம்பூர் தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளி இணைக்கட்டிட கட்டுமான பணி எதிர்வரும் ஜனவரி மாதம் தொடங்கவிருக்கிறது. இப்போது பள்ளி வாரியத்திடம் 10 லட்சம் ரிங்கிட் இருப்பதாகவும் எஞ்சிய 5 லட்சம் ரிங்கிட் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தரும்படி மனித வள அமைச்சர் வி. சிவக்குமாரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என தாமான் மெலாவத்தி தமிழ்ப் பள்ளி வாரியத் தலைவர் டாக்டர் மா. கணபதி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மனித வள அமைச்சில் நேற்று நடைபெற்ற முக்கிய சந்திப்பில் தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளி தலைமையசிரியர் குணசேகரன் உட்பட அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். அமைச்சர் சிவக்குமார் தலைமையில் இணைக்கட்டிடத்தின் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கவிருப்பதாக அவர் கூறினார். தைப் பொங்கலுக்குப் பிறது இணைக்கட்டிடத்திற்கான பூமி பூஜை விழா நடைபெறவிருக்கும் தகவலையும் அவர் வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!