இஸ்லாமபாத், ஜன 30- ஆவணங்களை கசிய விட்டது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்கூட்டியே கைது செய்யப்பட்டதால் தற்போது இம்ரான் கான் சிறையில் இருந்து வருகிறார். ஆவணங்கள் கசிவு தொடர்பில் சிறைக்குள்ளே விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதாக அவரது அரசியல் கட்சியைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.