![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-05-Mar-2024-09-21-AM-9455.jpg)
பெங்ளூரு, மார்ச் 5 – கர்நாடக மாநிலத்தில் கேசக்குலி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென காட்டு யானை ஒன்று உள்ளே புகுந்து அங்கு வேலை செய்து வந்த விவசாயி ஒருவரை தாக்க முயன்றபோது அவர் மயிரிழையில் உயிர் தப்பினர். அந்த விவசாயி பாக்கு தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு நுழைந்த காட்டு யானை அவரை விரட்டி தாக்க முயன்றது. இதனால் அந்த விவசாயி அலறி அடித்து ஓட்டம் பிடித்ததோடு இறுதியில் காருக்கு அடியில் ஒளிந்து கொண்டதால் உயிர் பிழைத்தார். மேலும் அங்கிருந்த நாய்க்குட்டி ஒன்றும் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடியின் காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.