Latestமலேசியா

கிள்ளானில் பயங்கரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற சந்தேகத்தில் கணவன் கைது

கிள்ளான், ஜூன்-10, சிலாங்கூர், கிள்ளானில் சொந்தக் கணவனால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Bandar Botanik-கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வெள்ளிக்கிழமைக் காலை 7 மணிக்கு அப்பயங்கர சம்பவம் நிகழ்ந்தது.

கழுத்திலும், வலதுக் கையிலும் கத்தியால் அறுக்கப்பட்ட தடயங்களுடன் 28 வயது அப்பெண் கட்டிலில் இறந்து கிடந்தார்.

கழுத்து, கன்னம், காது, கை முட்டி, தலை மற்றும் விரல்களில் மொத்தமாக 12 கீறல்கள் இருந்தது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

அப்பெண்ணின் மரணத்துக்குக் கழுத்தறுக்கப்பட்டதே காரணம் என உறுதிச் செய்யப்பட்ட நிலையில், 31 வயது கணவன் கைதாகி விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

திருமணமாகி ஈராண்டுகள் ஆகி, 6 மாத பெண் குழந்தை இருக்கும் அத்தம்பதிக்கு இடையில் பிரச்னை இருந்து வந்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கிள்ளான் போலீஸ் கூறியது.

நெருங்கியக் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சாட்சிகள் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!