![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-01-Apr-2024-02-17-PM-537.jpg)
சிரம்பான், ஏப்ரல் 1 – மூன்று வயது பெண் குழந்தையை அலட்சியப்படுத்தி மரணம் விளைவித்த குற்றச்சாட்டை, பெண் ஒருவரும் அவரது காதலனும் ஒப்புக் கொண்டனர்.
42 வயது நோராய்னி ஹருன் மற்றும் 38 வயது முஹமட் கைருல் சம்சுவா இஸ்ராக்கிற்கு எதிராக இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
அவர்கள் வேண்டுமென்றே, தங்கள் பராமரிப்பில் இருந்த நுராய்ரின் அபியா முஹமட் பட்லி எனும் குழந்தைக்கு மரணம் விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 18-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரையில், நண்பகல் மணி 12-க்கும் மாலை மணி 6.45-க்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 50 ஆயிரம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தலா 20 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக, போர்ட் டிக்சன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று வயது பெண் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, மார்ச் 27-ஆம் தேதி, சம்பந்தப்பட்ட ஆடவன் கைதானான் என்பது குறிப்பிடத்தக்கது