Latestமலேசியா

தங்காக்கில் மனைவியைக் கொன்ற வேலையில்லாத ஆடவர் மீது குற்றச்சாட்டு; மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்

தங்காக், ஜூன்-10 – கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து காய்கறி வெட்டும் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்ததாக, வேலையில்லாத ஆடவர் மீது ஜோகூர், தங்காக் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், 32 வயது Mohamad Khairul Azmi Ithnin-னிடம் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

ஜூன் 2-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செரோம், தாமான் கஹாயாவில் உள்ள வீட்டில் தனது 34 வயது மனைவி Lecah Junus-சை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் இது கட்டாய மரண தண்டனையை கொண்டு வரும் குற்றமாகும்.

இவ்வேளையில், அரசு தரப்பின் விண்ணப்பத்தை ஏற்றுக் Khairul-லை ஜோகூர் பாருவில் உள்ள பெர்மாய் மருத்துவமனைக்கு மனநல பரிசோதனைக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடற்கூறு மற்றும் மரபணு பரிசோதனை அறிக்கைகளை முடிக்க கால அவகாசம் வழங்கும் வகையில், வழக்கு ஜூலை 8 ஆம் தேதி மறுசெவிப்புக்கு வருமென்றும் அறிவிக்கப்பட்டது.

கடந்த கால பிரச்னைகள் தொடர்பான வாய் தகராறால் அக்கொலை நடந்ததாக முன்னதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!