Latestமலேசியா

திரங்கானுவில், இரு மாவட்டங்களில் கூட்டு இராணுவப் பயிற்சி ; பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை

கோலாத் திரங்கானு, மே 31 – திரங்கானு, கோலா நெருஸ், செபராங் தாகிர் மற்றும் செட்டியூ ஆகிய மாவட்டங்களில் துப்பாக்கிச் சூடு சத்தங்களை கேட்டாலோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை கண்டாலோ, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அரச மலேசிய இராணுவப் படை, அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து, இவ்வாண்டுக்கான தற்காப்பு பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

இரு படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளும் அந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மலேசிய இராணுவ மக்கள் தொடர்புப் பிரிவு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

அரச மலேசிய கடற்படை, ஆகாயப்படை மற்றும் அமெரிக்க கடற்படை ஆதரவில் நடத்தப்படும் அத்த பயிற்சியில், பத்தாவது பாராசூட் பிரிகேட், 15-வது கடற்படை பிரிவு, அமெரிக்க கடற்படை அதிகாரிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி நடைபெறும் பகுதியில், இராணுவ வாகனங்கள் காணப்படும் என்பதோடு, வெடிப்பு அல்லது துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்கலாம்.

அதனால், அதனை கண்டு அச்சப்பட தேவையில்லை எனவும், பயிற்சி நடைபெறும் பகுதியில் நுழைய வேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அதே சமயம், சாலையில் இராணுவ வாகனங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், இடையூறு அல்லது விபத்துகளை தவிர்க்க இடம் விட்டு பயணிக்குமாறும் அறிவுறுதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!