![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-28-Apr-2024-10-00-AM-4863.jpg)
சித்தியவான், ஏப்ரல்-28, பேராக் சித்தியவானில் தன்னைத் துரத்திய நாயிடம் இருந்துத் தப்பிக்கும் முயற்சியில் பதட்டத்தில் சாலையின் குறுக்கே ஓடிய சிறுவன், காரால் மோதப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பியக் காணொலி வைரலாகியுள்ளது.
லூமூட் சுங்கத் துறை வளாகத்திற்கு அருகே
காலை 8.45 மணி வாக்கில்
நாய் துரத்தியதால் 2 சிறார்கள் தலைத்தெறிக்க ஓடுவது, வாகனமோட்டி ஒருவர் பதிவுச் செய்த 20 வினாடி காணொலியில் தெரிகிறது.
அச்சிறுவர்களின் ஒருவன் திடீரென சாலையின் குறுக்கே ஓடி, வலப்புறப் பாதையில் கால் இடறி விழுந்தான்.
அப்போது வேகமாக வந்த Proton Wira கார், நல்ல வேளையாக அவனை மோதாமல் சாலைத் தடுப்பில் மோதி நின்றது.
அக்காரோட்டி கண நேரம் தாமதித்திருந்தாலும் அச்சிறுவனை உயிரோடு பார்த்திருக்க முடியாது என நெட்டிசன்கள் நிம்மதி அடைந்தனர்.
உயிர் தப்பிய சிறுவனுக்கு, சாலையில் விழுந்ததில் சிராய்ப்புக் காயங்களே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் பிடிபட்ட 3 நாய்களை ஊராட்சி மன்றம் சீல் வைத்திருப்பதாகவும் அறியப்படுகிறது.