![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-27-May-2024-09-11-AM-9182.jpg)
ஷா ஆலாம், மே-27, சிலாங்கூரில் கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் 28 இடங்கள் அட்டவணையிடப்படாத தண்ணீர் விநியோகத் தடையை எதிர்நோக்குகின்றன.
ஷா ஆலாம், செக்ஷன் 22, Jalan Budiman-னில் உடைந்த நீர் குழாயைப் பழுதுப் பார்க்கும் அவசரப் பணிகள் காரணமாக அத்தடை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கிய தண்ணீர் விநியோகத் தடை, பழுதுப்பார்ப்புப் பணிகள் நிறைவடைந்ததும் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும் என Air Selangor நிறுவனம் கூறியது.
நீர் குழாய் பழுதுப்பார்ப்புப் பணிகள் திங்கட்கிழமை அதிகாலை நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எது எப்படி இருந்தாலும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு, பாதிக்கப்பட்ட இடங்களில் தண்ணீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என அந்நிறுவனம் அறிக்கையொன்றில் கூறியது.
இடங்களைப் பொருத்து அதில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும் அதுசுட்டிக் காட்டியது.