![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-04-Apr-2024-09-37-AM-4045.jpg)
கோலாலம்பூர், ஏப் 4 – பேரரசர் Sultan Ibrahim மற்றும் பேரரசியார் Raja Zarith Sofiah வின் பெயரை சமூக வலைத்தளங்களில் தவறாக பயன்படுத்துவோரின் தகவல்களை தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மற்றவர்களின் பெயர்களையும் அடையாளத்தையும் தவறாக பயன்படுத்துவது குற்றம் என்பதால் அத்தகையோருக்கு எதிராக சட்டத்திற்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என Sultan Ibrahim Sultan Iskandar தமது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார். அதோடு பேரரசரின் பெயரில் Ibrahim ibni Almarhumm என்ற போலிப் பெயரில் வெளியான முகநூல் கணக்கு குறித்து தகவலையும் Sutan Ibraim தெரிவித்துள்ளார்.