![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-27-May-2024-09-02-AM-1926.jpg)
கோலாலம்பூர், மே-27, தேசியக் கால்பந்தாட்டக்காரர் Faisal Halim மீது எரிதிராவகத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 8 கைவிரல் ரேகைப் பதிவுகளில் 3, தேசியப் பதிவுத் துறையின் தரவுகளோடு ஒத்துப் போகவில்லை.
போலீஸ் வசமுள்ள தரவுகளோடும் அவை ஒத்துப் போகவில்லை என தேசியப் போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain உறுதிபடுத்தினார்.
ஒருவேளை அம்மூன்றும் கட்டைவிரல் ரேகையாக இல்லாமல் இருக்கலாம் என்றார் அவர்.
எஞ்சிய 5 விரல் ரேகைகள், துல்லிதமாக அடையாளம் காணும் அளவுக்குத் தெளிவாக இல்லை என முடிவானதாக ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், துப்புத் துலங்கும் பொருட்டு ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக IGP சொன்னார்.
முக்கியச் சந்தேக நபரைப் பிடிக்கும் முயற்சியில் கடந்த வாரம் போலீஸ் அவனது முக வரைபடத்தை வெளியிட்டது.
மே 5-ம் தேதி பேரங்காடியொன்றின் கார் நிறுத்துமிடத்தில் வைத்து Faisal Halim மீது Acid வீசப்பட்டதில், அவர் கடுமையான தீப்புண் காயங்களுக்கு ஆளானார்.