Latestமலேசியா

போலி துப்பாக்கிகளுடன் கைவரிசை; முன்னாள் போலீஸ்காரர் உட்பட மூவர் மீது மலாக்காவில் குற்றச்சாட்டு

மலாக்கா, மே-31, போலி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி 1,150 ரிங்கிட் நட்டம் ஏற்படும் அளவுக்கு கும்பலாகக் கொள்ளையிட்டதன் பேரில் 3 ஆடவர்கள் மீது மலாக்காவில் இரு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் ஒரு முன்னாள் போலீசான 33 வயது Mohd Firdaus Md Nor, 38 வயது வேலையில்லாத ஆடவர் Abd Hayat Firdaus Abd Malek, 36 வயது திட்ட வரைக் கலைஞர் Mohd Khairi Mohd Noor ஆகிய மூவரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரினர்.

இம்மாதத் தொடக்கத்தில் மலாக்காவில் வெவ்வேறு இடங்களில் போலி துப்பாக்கிகளுடன் கொள்ளையிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

அனைத்து குற்றச்சாட்டுகளும் ஜூலை 9-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!