கிள்ளான், டிச 2 – 1997ஆம் ஆண்டு முதல் முறையாக மலேசியாவை பிரதிநிதித்து எவெரெஸ்ட் சிகரத்தை தொட்டு நாட்டிற்கும் இந்தியர்களுக்கும் பெருமைச் சேர்த்த டத்தோ மகேந்திரன் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி பணி ஓய்வு பெறவிருக்கிறார்.
தாமன் ஶ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்த அவருக்கு, நேற்று முன் தினம் பிரியாவிடை நிகழ்ச்சி பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. 2021ஆம் ஆண்டு அவர் இப்பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றார்.
பணி ஓய்வுப் பெற்ற பின்னர், சிறிதுகால ஓய்வுக்குப் பின்னர், மீண்டும் இந்த மலையேறும் நடவடிக்கைகளில் முழு நேரமாக ஈடுபடும் எண்ணம் கொண்டிருப்பதாகவும் டத்தோ மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது 34வது வயதில், தனது சகா டத்தோ மோகனதாஸுடன் அவர் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு படைத்த சாதனை அச்சமயத்தில் ஓட்டுமொத்த மலேசியர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.