கோலாலம்பூர், ஏப்ரல் 17 – சிலாங்கூரிலும், தலைநகர் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் இன்று அதிகாலை பெய்த அடை மழையைத் தொடர்ந்து, சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று காலை மணி 7.15 நிலவரப்படி, மேருவிலுள்ள, சுங்கை பிஞ்சாய் ஆற்றின் நீர் மட்டம், 4.2 மீட்டர் அபாய அளவை தாண்டி 4.66 மீட்டராக பதிவாகியுள்ளது. அதனால், எந்நேரத்திலும் வெள்ளம் கரைப்புரண்டோடும் சாத்தியம் தென்படுவதாக கூறப்படுகிறது.
அதே போல, கிள்ளான், சுங்கை ராசாவ், பெட்டாலிங், கம்போங் மெலாயு சுபாங்கிலுள்ள, சுங்கை டமான்சாரா ஆறுகளிலும், நீரின் அளவு அபாய நிலையை தாண்டியுள்ளதாக, Infobanjir அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கை ராசாவில் நீரின் அளவு, 3.9 மீட்டராக பதிவாகியுள்ள வேளை ; சுங்கை டமான்சாராவில் 16.99 மீட்டராக உயர்ந்துள்ளது.
கோம்பாக்கிலுள்ள, ரவாங் ஆறு, பண்டார் கிள்ளானிலுள்ள, சுங்கை கிள்ளான் ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.