
கோலாலம்பூர், ஜூன் 14 – இன்று அதிகாலை, ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதலை முன்னிட்டு எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
நேற்று புர்சா மலேசியாவின் எரிசக்தி குறியீடு 726.13லிருந்து 2.01 சதவீதம் உயர்வு கண்டு 740.76ஆக அதிகரித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஈரானின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த நிலையில், முந்தைய எண்ணெய் விலையேற்றங்களைக் காட்டிலும் இம்முறை இரண்டு அல்லது மூன்று மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று UOB வங்கியின் பொருளாதார ஆலோசக தலைவர் முகமது செடெக் ஜந்தன் (Mohd Sedek Jantan) கூறியுள்ளார்.
இந்நிலையில் பெட்ரோன் மலேசியாவின் பங்கு விலை 14 சென் உயர்ந்து 3.88 ரிங்கிட்டாகவும் ஹெங்யுவான் சுத்திகரிப்பு நிறுவனம் 13 சென் உயர்ந்து 1.85 ரிங்கிட்டாகவும் மற்றும் ஹைபிஸ்கஸ் பெட்ரோலியம் 11 சென் உயர்வு கண்டு 1.66 ரிங்கிட்டாகவும் ஏற்றம் கண்டுள்ளது.