Latestஇந்தியாஉலகம்

எல் நினோ, எத்தனால் தேவையின் எதிரொலி: இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி பல ஆண்டுகள் பாதிக்கப்படலாம்

புதுடெல்லி, ஜூன்-22 – எல் நினோ வானிலை தாக்கம் மற்றும் எத்தனால் உற்பத்திக்கான அதிகரித்து வரும் தேவை காரணமாக, இந்தியா அடுத்த சில ஆண்டுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்க முடியாத நிலை உருவாகலாம் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒருகாலத்தில் உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக இருந்த இந்தியா, தற்போது கரும்பு உற்பத்தி குறைவு மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பு காரணமாக ஏற்றுமதிக்கான உபரி சர்க்கரையை உருவாக்குவதில் சிரமம் எதிர்கொண்டு வருகிறது.

எல் நினோ தாக்கத்தால் பருவமழை குறையக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், கரும்பு சாகுபடி மற்றும் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனுடன், பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனால் உற்பத்திக்காக அதிகளவு கரும்பு பயன்படுத்தப்படுவதும் சர்க்கரை விநியோகத்தை மேலும் சுருங்கியுள்ளது.

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி உள்நாட்டு நுகர்வை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், சர்க்கரை கையிருப்பும் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலை தொடர்ந்தால், இந்தியா 2027 அல்லது 2028ஆம் ஆண்டுகளில் மீண்டும் சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும், இது உலகளாவிய சர்க்கரை விலைகளை உயர்த்தக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!